தினம் ஒரு பழமொழி
இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்.
பொருள்
இடுதல் என்றால் கொடுத்தல். இங்கு வேலை செய்துகொடுப்பது என்று பொருள். தொடுதல் என்றால் தொடங்குதல். இங்கு வேலைகளைத் தொடங்கி உதவியவர்கள் என்று பொருள்.
அதாவுது, கொடுத்தவர்கள், உதவியவர்கள் எல்லோரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கிவிட்டுப் புதிதாக வேலைக்கு வந்தவர்களை நல்லவர்கள் என்று பழைய வேலையாட்களின் மனக்குறையாக வெளிப்படும் சொற்கள்.
Friday, January 26, 2024
தினம் ஒரு பழமொழி | இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்
Wednesday, January 3, 2024
Proverbs | பழமொழி
பழமொழி 399 / 400
உரைத்தாலும் பேதைக்கு உணர்வு தோன்றாது
பழமொழி
பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.
பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும் நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு.
விளக்கம்
பூத்தாலும் காய் காய்க்காத மரங்கள் உள்ளன.
அதுபோல,
வயதில் மூத்தாலும் நல்லனவற்றை அறிந்துகொள்ளாத மக்கள் உள்ளனர்.
பாத்தியில் விதைத்தாலும் முளைக்காத சில விதைகள் உள்ளன.
அதுபோல,
அறியாப் பேதைகளுக்கு என்னதான் எடுத்துச் சொன்னாலும் உணர்வு தோன்றாது.
Subscribe to:
Comments (Atom)
தினம் ஒரு பழமொழி
தினம் ஒரு பழமொழி சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? பொருள்/Tamil Meaning: மாணிக்கவாசகர் இயற்றிய திரு...
-
தினம் ஒரு பழமொழி ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல. பொருள்: மிராசுதார் ஐயா தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார், அவர் மனை...
-
தினம் ஒரு பழமொழி ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே! பொருள்: நன்மை நடப்பதும், தீமை நடப்பதும் பெண்கள் கையில் தான் இருக்கிறது. உண்மையான பொர...
-
தினம் ஒரு பழமொழி ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. பொருள்: ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும். உண்மையான பொருள்: மகாபாரதத்தில் கர்ண...