பழமொழி 399 / 400
உரைத்தாலும் பேதைக்கு உணர்வு தோன்றாது
பழமொழி
பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.
பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும் நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு.
விளக்கம்
பூத்தாலும் காய் காய்க்காத மரங்கள் உள்ளன.
அதுபோல,
வயதில் மூத்தாலும் நல்லனவற்றை அறிந்துகொள்ளாத மக்கள் உள்ளனர்.
பாத்தியில் விதைத்தாலும் முளைக்காத சில விதைகள் உள்ளன.
அதுபோல,
அறியாப் பேதைகளுக்கு என்னதான் எடுத்துச் சொன்னாலும் உணர்வு தோன்றாது.
No comments:
Post a Comment