தினம் ஒரு பழமொழி
082. பழமொழி:
எட்டு வருஷம் எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுமாம்.
பொருள்:
எத்தனை முறை வந்த வழியே போனாலும் அது எந்த வழி என்று தெரியாது இருப்பது.
விளக்கம்:
எருமைக்கடா என்றது அடி முட்டாளைக் குறித்தது. எட்டு வருஷமாக அதே பாதையில் ஏரிக்குச் சென்று நீர் பருகிய எருமைக்கடா தினமும் வழி தெரியாது தேடிச் செல்லுமாம்.
இதுபோன்று அடி முட்டாளைக் குறித்த வேறு சில பழமொழிகள்.
எருது ஈன்றது என்றாள் தோழத்தில் கட்டு என்கிறதுபோல.
கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழு போன இடம்.
கழுதைப்பால் குடித்தவன் போலிருக்கிறான்.
காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?
குருடும் செவிடும் கூத்துப் பார்த்தாற்போல் செய்கிறாய்.
கொக்குத் தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கிறதுபோல.
நெல்லுக் காய்க்கு மரம் கேட்டவன்போல.
Friday, May 31, 2024
தினம் ஒரு பழமொழி 082. பழமொழி
Subscribe to:
Post Comments (Atom)
தினம் ஒரு பழமொழி
தினம் ஒரு பழமொழி சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? பொருள்/Tamil Meaning: மாணிக்கவாசகர் இயற்றிய திரு...
-
தினம் ஒரு பழமொழி ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல. பொருள்: மிராசுதார் ஐயா தன் வயலில் விளையும் நெற்கதிரைப்போல் ஒல்லியாக இருக்கிறார், அவர் மனை...
-
தினம் ஒரு பழமொழி ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே! பொருள்: நன்மை நடப்பதும், தீமை நடப்பதும் பெண்கள் கையில் தான் இருக்கிறது. உண்மையான பொர...
-
தினம் ஒரு பழமொழி ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. பொருள்: ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும். உண்மையான பொருள்: மகாபாரதத்தில் கர்ண...
No comments:
Post a Comment