Friday, May 31, 2024

தினம் ஒரு பழமொழி 082. பழமொழி

 தினம் ஒரு பழமொழி

082. பழமொழி:

எட்டு வருஷம் எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுமாம்.

பொருள்:

எத்தனை முறை வந்த வழியே போனாலும் அது எந்த வழி என்று தெரியாது இருப்பது.

விளக்கம்:

எருமைக்கடா என்றது அடி முட்டாளைக் குறித்தது. எட்டு வருஷமாக அதே பாதையில் ஏரிக்குச் சென்று நீர் பருகிய எருமைக்கடா தினமும் வழி தெரியாது தேடிச் செல்லுமாம்.

இதுபோன்று அடி முட்டாளைக் குறித்த வேறு சில பழமொழிகள்.

எருது ஈன்றது என்றாள் தோழத்தில் கட்டு என்கிறதுபோல.

கடா மேய்க்கிறவன் அறிவானோ கொழு போன இடம்.

கழுதைப்பால் குடித்தவன் போலிருக்கிறான்.

காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?

குருடும் செவிடும் கூத்துப் பார்த்தாற்போல் செய்கிறாய்.

கொக்குத் தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கிறதுபோல.
நெல்லுக் காய்க்கு மரம் கேட்டவன்போல.

No comments:

Post a Comment

தினம் ஒரு பழமொழி

 தினம் ஒரு பழமொழி சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? பொருள்/Tamil Meaning: மாணிக்கவாசகர் இயற்றிய திரு...